Our Feeds


Wednesday, December 13, 2023

SHAHNI RAMEES

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது...!

 

பௌத்தம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தவறானகருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கையை பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்குவின் சமூக ஊடகப் பதிவுகள் பௌத்த மதத்துக்கு அவமரியாதையாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்று (13) மாலை கம்பஹா மாவட்டத்தின் கலகெடிஹேன பிரதேசத்தில் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ரத்தினபுரியை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »