Our Feeds


Tuesday, January 9, 2024

News Editor

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி


 கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் சடலம் கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »