Our Feeds


Monday, January 15, 2024

News Editor

சீனப் பெருஞ்சுவரில் நீளமான ஓவியம் வரைந்து சாதனை நிலைநாட்டிய பெண்


 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32ஆவது பகுதி, கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போதுள்ளது.


வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.


இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார். இவர் 1,014 மீற்றர் நீளமுள்ள கேன்வாஸில் 'காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இவ்வோவியத்தை வரைந்துள்ளார்.


இதுகுறித்த காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »