Our Feeds


Sunday, January 7, 2024

News Editor

வட மாகாண வர்த்தகர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு


 வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்  சுடடிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில்,  அதற்கு தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ். பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று  யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »