Our Feeds


Thursday, January 18, 2024

News Editor

ஜயவர்தனபுர பல்கலைக்கழக புதிய மாணவர் நியமனத் திட்டம் குறித்த விசேட அறிவிப்பு


 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூகவியல் பீடத்தின் 2022/2023 புதிய கல்வியாண்டு தொடர்பான நியமனத் திட்டம் ஜனவரி 19 முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மனிதநேயம் மற்றும் சமூகவியல் பீடத்தின் புதிய மாணவர்களுக்கான புதிய மாணவர் நியமனத் திட்டத்தின் முதல் சுற்று ஜனவரி 19 முதல் 21, 2024 வரை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பௌதீக ரீதியாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை http://fhss.sjp.ac.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »