Our Feeds


Saturday, January 6, 2024

News Editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு கட்டமைப்பு


 குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காணும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் புதிய  கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

 

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாள கண்காணிப்பு நிறுவப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »