Our Feeds


Sunday, March 24, 2024

SHAHNI RAMEES

கேரள கஞ்சாவுடன் 2 கடற்படையினர் உட்பட மூவர் கைது

 

யாழ். - காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.

 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »