Our Feeds


Saturday, March 23, 2024

SHAHNI RAMEES

உக்ரைனின் மிகப் பெரிய நீா் மின் நிலையத்தில் ரஷ்ய தாக்குதல்...

 

உக்ரைனின் மிகப் பெரிய நீா் மின் நிலையம் உட்பட அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.



இது குறித்து அதிகாரிகள் நேற்று(22) கூறியதாவது: நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உட்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி ரஷ்யா நேற்று முன்தினம்(21) தீவிர தாக்குதல் நடத்தியது.



இந்த ஆண்டில் மின் உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது. கடந்த ஆண்டிலும் நாட்டின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடந்த ஆண்டைவிட மிகத் தீவிரமானதென அதிகாரிகள் தெரிவித்தனா்.



மின் உட்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா 60 ட்ரோன்களையும், சுமாா் 90 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி  வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா். இதுபோன்ற சரமாரியான வான்வழித் தாக்குதல்களை எதிா்கொள்வதற்குத் தேவையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »