Our Feeds


Friday, April 26, 2024

News Editor

கல்வியியற் கல்லூரி புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பம்


 கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »