Our Feeds


Tuesday, April 16, 2024

ShortNews Admin

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றில் வழக்கு



இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பயணித்து பிரச்சாரம் செய்வது தேர்தல் விதிமீறல் என்றும் அவரது மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »