கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை (17) மாலை 6 25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நிலவும் மோசமான வானிலையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.