ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமைக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி, ஈரானுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இல்லையேல் அப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத போர்ச் சூழல் உருவாகலாம் என வலியுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம்(13) இரவு, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவாக்கியது. இருப்பினும், 99 சதவீத தாக்குதல்களை இஸ்ரேல் தடுக்க முடிந்தது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் தணிந்தாலும், சரியான நேரத்தில் ஈரானிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.