Our Feeds


Tuesday, April 16, 2024

News Editor

மழையுடனான காலநிலையுடன் டெங்கு அபாயம்


 தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும், டெங்கு நோய் பரவுவதை தடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் கிட்டத்தட்ட 21,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »