பலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்துக் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பலஸ்தீனம் சார்பாக அல்ஜீரியா கொண்டு வந்த தீர்மானத்தை வீட்டோ செய்து இல்லாமலாக்கியது அமெரிக்கா.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்புரிமை பெற்றுள்ள 15 நாடுகளில் வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் பலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வாக்களித்ததுடன், பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.
இந்நிலையில் தான் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை மொத்தமாக வலுவிழக்க செய்துள்ளது.
பலஸ்தீனுக்கான தனி நாடு அந்தஸ்து ஐ.நா வுக்கு வெளியில் பேசி முடிக்க வேண்டிய விவகாரம். என ஐ.நா வுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்த நிலையில், அப்படியானால் இஸ்ரேலை மட்டும் தனி நாடாக ஐ.நா சபையின் 181வது விதியை பயன்படுத்தி அங்கீகரித்தது சரியா? என கேள்வியெழுப்பியிருந்தார்.
எமது சுதந்திரத்திற்காக நாம் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தொடர்ந்தும் தியாகம் செய்து வருகிறோம். நாம் கேட்ப்பது மற்ற மக்களை போன்ற நிம்மதியான வாழ்வு மட்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை. என்று பலஸ்தீன தூதுவர் ஐ.நா வில் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.