Our Feeds


Sunday, May 5, 2024

ShortNews Admin

ஜனாதிபதி பக்கம் செல்ல 15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயார்.



சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

மே தின பேரணியில் இதற்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், கட்சி இதற்கு எதிராக இருந்தாலும், இதற்கு ஆதரவளிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »