Our Feeds


Wednesday, May 29, 2024

ShortNews Admin

1700 ரூபா சம்பளம் – வழக்கு மே 31 மீண்டும் விசாரணைக்கு


 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று (29) அறிவிக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்க எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தன.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »