இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர் .
இந்த போட்டி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 29 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
அத்துடன் , இலங்கை கிரிக்கெட் அணியில் 15 வீரர்கள், 04 மேலதிக வீரர்கள் மற்றும் முகாமையாளர்கள், பயிற்சியாளர்கள், வைத்தியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட 25 பேர் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
![](https://www.blogger.com/img/transparent.gif)
![](https://www.blogger.com/img/transparent.gif)