Our Feeds


Tuesday, May 14, 2024

Zameera

இருபதுக்கு - 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்கா புறப்பட்டது இலங்கை அணி


 இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர்  இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர் . 

இந்த போட்டி ஜூன் மாதம் முதலாம் திகதி  முதல் ஜூன் மாதம் 29 ஆம் திகதி  வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. 

அத்துடன் , இலங்கை கிரிக்கெட் அணியில் 15 வீரர்கள், 04 மேலதிக வீரர்கள் மற்றும் முகாமையாளர்கள், பயிற்சியாளர்கள், வைத்தியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட 25 பேர் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »