தொம்பே, மல்வான மைவல பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் சென்று இரு சடலங்களையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் ரம்பொட நாவலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்களாவார்கள்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.