Our Feeds


Sunday, May 5, 2024

ShortNews Admin

உச்சம் தொடும் வெப்பம் | இதுவரை 9 பேர் உயிரிழப்பு



இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகை வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »