கொழும்பு 7 விஜேராம மாவத்தை பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.
பீ.எம்.ஐ.சி.எச் பகுதியில் இருந்து விஜேராம மாவத்தைகுள் உள்நுழையும் வீதியில் உள்ள விகாரைக்கு அருகில் உள்ள பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதையடுத்து குறித்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ள நிலையில் மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.