Our Feeds


Friday, May 31, 2024

SHAHNI RAMEES

எகிப்தை விமர்சித்த ஹரீஸ் எம்.பி.யின் உரை தொடர்பில் பலஸ்தீன் அதிருப்தி



காஸா விவ­கா­ரத்தில் எகிப்­தினை விமர்­சித்து ஸ்ரீலங்கா முஸ்லிம்

காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை தொடர்பில் கொழும்­பி­லுள்ள பலஸ்­தீன தூத­ரகம் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளது.


இந்த உரை, ஆழ்ந்த வருத்­தத்­தி­னையும் கவ­லை­யி­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தாகத் தெரி­வித்து கொழும்­பி­லுள்ள பலஸ்தீன் தூது­வ­ரா­லயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீ­மிற்கு கடந்த மே 16 ஆம் திகதி கடி­த­மொன்றை எழு­தி­யுள்­ளது. இக்­க­டி­தத்தின் பிரதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீ­ஸிற்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.


கடந்த மே 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையின்போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸ் “இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யா­கு­வையும் அந்­நாட்டின் கொடுங்கோல் இரா­ணு­வத்­தி­னையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் இன்று பக்­கத்தில் இருக்­கின்ற எகிப்து ஜனா­தி­பதி சிசி நாட­க­மாடிக் கொண்­டி­ருக்­கின்றார். பலஸ்­தீன மக்­களை பலி கொடுப்­ப­தற்­காக ரபா எல்லைப் பிர­தேசம் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­திற்­காக திறந்­து­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது” என குறிப்­பிட்­டி­ருந்தார்.


இந்த கருத்து தொடர்­பி­லேயே பலஸ்தீன் தூது­வ­ரா­ல­யத்­தினால் கடிதம் எழு­தப்­பட்­டுள்­ளது. குறித்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

“பலஸ்­தீ­னத்­திற்கு எகிப்து உத­வு­வ­தில்லை என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீ­ஸினால் முன்­வைக்­கப்­பட்ட கருத்­தினை அடுத்து எமது தூது­வ­ரா­லயம் நெருக்­க­டியை எதிர்­நோக்­கி­யுள்­ளது.


பலஸ்­தீன விட­யத்தில் எகிப்து சர்­வ­தேச அரங்­கிலும், உள்­நாட்­டிலும் தேவை­யான எல்லா வழி­க­ளிலும் பல உத­வி­களை தொடர்ச்­சி­யாக வழங்கி வரு­கின்­றது.


பலஸ்­தீனின் எல்­லை­களை லெபனான், சிரியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நான்கு அரபு நாடுகள் பகிர்ந்து கொள்­கின்­றன. இவற்றில் ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகி­யன பலஸ்­தீ­னுக்­கான நேரடி நுழை­வா­யிலைக் கொண்­டுள்­ளன. இதன் கார­ண­மாக காஸா மக்­களை தமது நாடு­க­ளுக்குள் அனு­ம­திக்­கு­மாறு இஸ்ரேல் இவ்­விரு நாடு­க­ளுக்கும் கடு­மை­யான அழுத்­தங்­களை வழங்கி வரு­கி­றது. தாக்­கு­தல்கள் மூல­மாக காஸா மக்­களை இவ்­விரு நாடு­க­ளுக்கும் அனுப்பி விட்டு காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­று­வதே இஸ்­ரேலின் திட்­ட­மாகும். எனினும் இதற்கு எகிப்தும் ஜோர்­தானும் ஒத்­து­ழைக்­க­வில்லை.


அதே­போன்று சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் தென்­னா­பி­ரிக்க கொண்டு வந்த பிரே­ர­ணைக்கு எகிப்து ஆத­ர­வ­ளித்­தது. இஸ்­ரே­லுக்கு எதி­ராக எடுத்த இந்த தீர்­மா­னத்தில் எகிப்து பாரிய அழுத்­தங்­களைச் சந்­தித்­தது. அது மாத்­தி­ர­மன்றி பலஸ்­தீன அதி­கார சபை மற்றும் ஹமாஸ் போன்ற இயக்­கங்­களும் பலஸ்­தீ­னுக்கு எகிப்து வழங்கி வரும் ஆத­ர­வுக்கு எப்­போதும் தமது நன்­றியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன.


இவ்­வா­றான விட­யங்­களை அறி­யாமல் உயர் சபை­யான பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­வதன் மூலம் எகிப்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நாம் கரு­து­கிறோம்.


இவ்­வா­றான உரைகள் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் காஸா விட­யத்தில் சர்­வ­தே­சத்தை பிழை­யாக வழி­ந­டத்­தலாம். இதனால், தங்­க­ளது கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரது உரை தொடர்பில் மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறும் இதன் மூலம் பலஸ்­தீ­னு­ட­னான எகிப்தின் உறவில் பாதிப்­புகள் ஏற்­ப­டா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­மாறும் வலி­யு­றுத்­து­கிறோம்’’ என்றும் இக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.- நன்றி- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »