Our Feeds


Wednesday, May 1, 2024

ShortNews Admin

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார் விஜேதாச ராஜபக்ஷ - மைத்திரி அதிரடி அறிவிப்பு!



எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ களமிறங்குவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மறைந்த தி.பொ.வின் நினைவேந்தல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மைத்ரிபால, விஜயதாச ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக உறுதியளித்தார்.


“நான் இதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்து மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன் என உறுதியளித்துள்ளேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விஜயதாச போட்டியிடுவார், அவருக்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம்” என்றார்.


“ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரை நாங்கள் எடுத்துள்ளோம், அவர் இப்போது எங்களுடன் இணைந்துள்ளார். அவர் இனி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »