Our Feeds


Thursday, May 23, 2024

ShortNews Admin

திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீனவர்கள் இருவர் மாயம்

 

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என அம்மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10 மணியளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் கடல் நடுவே காணாமற்போயுள்ளதாக கூறப்படுகிறது.

வட்டாரம் 2 சல்லி பிரதேசத்தைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 45), முருகையா சுஜந்தன் (வயது 22) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர். 

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமற்போன மீனவர்களை தேடி சல்லி பிரதேசத்தைச் சேர்ந்த பத்துக்கும்‍ மேற்பட்ட மீனவர்கள் சென்றுள்ள நிலையில், இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »