Our Feeds


Friday, May 10, 2024

Zameera

இலங்கையில் மிகவும் முக்கியமான ஒன்று பரீட்சை!


 இலங்கையில் மிகவும் முக்கியமான ஒன்று பரீட்சை இது தொடர்பான செயற்பாடுகளில் மிகவும் அவதானம் தேவை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்யைில்,

க.பொ.த சாதாரண பரீட்சையின் வினாத்தாள் வௌியாகியமை பாரிய பிரச்சனை இது சம்பந்தமாக முறையான விசாரணை செய்ய வேண்டும்.

வினாத்தாள் வௌியானதற்கு சரியான விசாரணைகளை செய்து இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது. வினாத்தாள் எண்ணிக்கையை விட அதிகமாக தேர்வுத்துறை அச்சடித்துள்ளது. இதற்கான காரணம் தான் என்ன? வினாத்தாள்கள் வீணாக போவது ஏன்? இதனால் வேறு பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு.

நாங்கள் கல்வி அமைச்சிடம் இது தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ள கேட்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

- கொழும்பு நிருபர் க்ளின்டன் -

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »