Our Feeds


Friday, May 24, 2024

Zameera

பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை


 இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக  உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக  உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 24 வீத குடும்பங்கள் மட்டளவில்  உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »