Our Feeds


Saturday, May 4, 2024

ShortNews Admin

மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் நடவடிக்கை புரட்சிகரமானது


 மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதாகும் எனவும், இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற “உறுமய” திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது, முதற்கட்டமாக மகாவலி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »