Our Feeds


Sunday, May 5, 2024

Zameera

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு


 நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட  பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள  வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில், வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »