ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள்
அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் கீழ் கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவையாற்றிய சிறந்த அரசியல்வாதியான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் கீழ் கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" ஒன்றை அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன.