Our Feeds


Thursday, May 9, 2024

ShortNews Admin

NMRA முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல்


 தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னரே அவரது கைது இடம்பெற்றுள்ளது.

மனித இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாயடிக் ஊசி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »