Our Feeds


Friday, June 7, 2024

Zameera

1,700 ரூபாய் சம்பளம் இம்மாதம் கிடைக்காது


 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக 1,700 ரூபாய் சம்பள உயர்வு இம்மாதம் (10)ஆம் திகதி தொழிலாளர்கள் கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமென  தொழில் அமைச்சின் செயலாளர் மே 21 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தத் தொகையை, தம்மால் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு காட்டி வந்திருந்தது. சம்பள அதிகரிப்பு வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி  21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை கடந்த (03) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென தீர்ப்பளித்தது.  

இது இவ்வாறிருக்க,  இம்மாதம் (10) தாம் திகதி வழங்கப்படவுள்ள மாத சம்பளம் 1,700 ரூபாய் படியே தயாரிக்கப்படுமென  தொழிலாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். 

இருந்த போதிலும் இம்மாத சம்பளத்தின் இறுதி கணக்கு, 05ஆம் திகதி புதன்கிழமை  தோட்ட நிர்வாகங்களால் முடிக்கப்பட்டுள்ளது. ஆகையால், பழைய சம்பளமே கிடைக்குமென தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிருபங்கள் எவையும், தங்களுக்கு கிடைக்கவில்லையென தொழிற்சங்க தலைவர்களிடம், தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »