முறையாக பதிவு செய்யாமல் யானைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகிய தரப்பினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முறையான அனுமதிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட யானைகளை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவித்து கொழும்பு மற்றும் மாத்தளை நீதவான் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவையும் செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.