வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பொது பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள் மற்றும் சிறப்பு நோக்கங்களுக்காக வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
அத்துடன், இவ்வருடத்தின் நான்காம் காலாண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான பொதுத் திட்டம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.