இலங்கைக்கான ஐ,நா வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ரே பிரண்சே (Marc Andre Faranche ) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை(12) கொழும்பு-7 இல் அமைந்துள்ள ஐ.நா.சபை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது தற்போதைய விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலையை மையப்படுத்திக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.