Our Feeds


Sunday, June 2, 2024

ShortNews Admin

யாழில் பயங்கரம் - பெண்ணொருவர் தீயிட்டுக் கொலை

 

யாழ்ப்பாணத்திலும் கண்டியிலும் மனித கொலைகள் இரண்டு இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் யாழ் பகுதியில் உள்ள நபரொருவருடன் தொடர்பு கொண்டு இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில், பெண்ணை அவரது கள்ளக்காதலன் தீயிட்டு கொளுத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், சந்தேகநபருடன் அவரது தாயாரின் மயானத்தில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹய்யாவ பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »