கசினோவில் இருந்து சம்பாதித்த கறுப்புப் பணத்தை சிலர் வெள்ளையாக்கி, ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க முதலீடு செய்தாலும் அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள 8750 மில்லியன் ரூபாவை தேர்தலுக்கு பயன்படுத்தாமல் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்த முடியும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“.. 90 சதவீதம் தொடர் செலவினம் ஆசிரியர் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. மூலதன உள்ளீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஒழுங்கீனத்தை அகற்ற எதுவும் செய்ய முடியாது. ஒரு பக்கம், அரசியல் வாதிகள் வேற்றுமையை அகற்றச் சொல்கிறார்கள். வாக்குகளைப் பெறுவதற்காகவும் செய்யப்படுகிறது.
ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வு பற்றி பேசும் போது, ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று மீண்டும் கூறப்படுகிறது. ஆம், அவை அனைத்தும் செய்யப்பட வேண்டும். அதையெல்லாம் செய்ய, கொடுக்கப்பட்ட பணத்தை மட்டுமே நிர்வகிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுப்படி, 8750 மில்லியன் ரூபாவை நான் பெற்றால், அது கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும், இதனால் தேர்தலில் பெரும் தாக்கம் ஏற்படும்..”