Our Feeds


Wednesday, July 31, 2024

Admin

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு - முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் உறுதி!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 116 பேர் கொண்ட குழு இன்று (31) கூடி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆதரவளிப்பதாக அந்தக் குழுவினர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

116 பேர் கொண்ட இந்தக் குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »