இன்று (ஜூலை 10) நண்பகல் 12 மணிக்குள் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் பதவி நீக்கம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் (2390/28) ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.