Our Feeds


Saturday, July 20, 2024

SHAHNI RAMEES

30 எம்.பிகளுக்கு விசாரணைக் குழு எச்சரிக்கைக் கடிதம்...

 

சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய முப்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணைக் குழு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியுள்ளன.



முப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 67 ஆகும்.



சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன் சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.



புதிய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »