Our Feeds


Thursday, July 18, 2024

SHAHNI RAMEES

#Update: தாயே சிறுமியை கிணற்றில் வீசி கொன்றார் – பொலிஸார் அறிவிப்பு..!

 

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



நேற்று (17) குறித்த சிறுமி, அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக, ருவன்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



இச்சம்பவம் 16 ஆம் திகதி இரவு 11 மணிக்கும் நேற்று (17) அதிகாலை 5.30 மணிக்குமிடையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.



சிறுமியின் தாயாரே சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளனர்.



உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் எனவும், அவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



உயிரிழந்த சிறுமியின் சடலம் உறவினர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »