2025 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்று (01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.