Our Feeds


Saturday, December 7, 2024

SHAHNI RAMEES

அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறீதரன் எம்.பி நியமனம்..!

 


இலங்கை பாராளுமன்ற அரசியலமைப்புக்

குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய 11 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரிலிருந்து அரசியலமைப்புக் குழுவுக்கான பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்வதாக தீர்மானிக்கப்பட்டது.


இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை வரவேற்று, சிறீதரனது நியமனத்தின் தேவைப்பாட்டையும் வலியுறுத்தியிருந்தார்.


சமநேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானை நாமல் ராஜபக்ச முன்மொழிந்தார். 


அதேவேளை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தன்னைத்தானே பிரேரித்த போதும், பின்னர் போட்டியிலிருந்து தானாகவே விலகியிருந்தார்.


அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியலமைப்புக் குழுவின் பிரதிநிதியாக சிவஞானம் சிறீதரன் தெரிவாகியுள்ளார்.


குறித்துரைக்கப்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் சமுகமளிக்காததுடன், முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்களும் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியிருந்த நிலையில் சிவஞானம் சிறீதரன் 11 வாக்குகளையும், ஜீவன் தொண்டமான் 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதற்கமைய ஒருவாக்கு வித்தியாசத்தில் அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறீதரன்


தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »