Our Feeds


Saturday, December 14, 2024

Sri Lanka

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!


நாட்டிற்கு இதுவரை சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »