ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை தேர்தல்
ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த முறைப்பாட்டினை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.