Our Feeds


Thursday, January 30, 2025

Zameera

சுவசெரிய சேவைக்கு 150 புதிய வாகனங்கள் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு


 1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவை நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை தற்போது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. (1990) சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம். ஊழியர்களின் சேவைக்கான கௌரவத்தை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், ஊழியர்களை நீண்ட காலத்திற்கு சேவையில் தக்கவைத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »