Our Feeds


Wednesday, January 22, 2025

Admin

IMF ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

புதிய நிர்வாகத்தின் கீழ் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரிச் சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளதை விட மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைகளின் கடினமான விடயங்களை ஓரளவுக்குக் குறைக்கத் தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி எல்லையை 150,000 ரூபாயாக உயர்த்துவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய பால் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு, பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு மாணவர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆகியவையும் இதில் அடங்கும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »