Our Feeds


Thursday, February 6, 2025

Sri Lanka

டயனாவுக்கு பிறப்பித்த பிடியாணையை மீளப் பெற உத்தரவு - நடந்தது என்ன?



குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.


டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »