செலவுகளை மேலும் குறைக்கும் வகையில் தேர்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று புதிய ஜனநாயக்க முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உள்ளூராட்த் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் அறிவித்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது ரவி கருணநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் அவர்களின் வியாக்கியாணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இதற்கு முன்னர் 8900 பேரின் செலவுகள் மற்றும் 2900 மில்லியன் ரூபா செலவிடும் பிரச்சினை தொடர்பில் கதைத்துள்ளோம். இந்நிலையில் தற்போது முடிந்தளவு செலவுகளை குறைத்துக்கொண்டு செல்கையில் இந்த விடயத்தல் இதற்கு மேலும் செலவுகளை தாங்கிக்கொள்ளக் கூடிய தேர்தல் முறையை உருவாக்க முடியாதா? மக்களிடையே இவ்வாறான செலவுகளை தாங்கிக்கொள்ள முடியுமா என்ற பிரச்சினைகள் உள்ளன. இதனால் செலவுகளை குறைக்கக் கூடிய முறைகள் உள்ளனவா என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம் என்றார்.