Our Feeds


Saturday, February 15, 2025

Admin

வரலாற்றில் சிறந்த புத்தாண்டு இந்த ஆண்டு - உபுல் அபேவிக்ரம!


மின்வெட்டு போன்ற சிறிய சம்பவம் நடந்தாலும், சில எதிர்க்கட்சிகள் பெரிய விமர்சனங்களை முன்வைப்பதற்காகவே செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே உபுல் அபேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

“அரிசி இல்லை,தேங்காய் இல்லை,குரங்கு போன்ற சிறிய சிறிய நிகழ்வுகள் நடக்கும் போது பெரிய அளவில் விமர்சிக்க முடியும்.

மின் தடை ஏற்பட்ட போது மின்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதை மிக விரைவாக நிர்வகித்து சீரமைக்க நடவடிக்கை எடுப்போம் என அறிவித்தனர்.

“இந்நாட்டு மக்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் சிறந்த புத்தாண்டை அனுபவிப்பார்கள். ” என கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »