Our Feeds


Monday, February 24, 2025

Sri Lanka

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படலாம் - நிர்ப்பந்தத்தில் அரசாங்கம்!


எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க நேர்ந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சக்தி வலு அமைச்சர் குமார ஜயகொடி, மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் உஷ்ணமான காலநிலை காரணமாக மின்னுற்பத்திக்கு அதிகப் பிரயத்தனம் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் எதிர்வரும் காலத்தில் மின்சாரக் கட்டணத்தைச் சீரமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படலாம். ஆனால் அதற்கு எமக்கு விருப்பம் இல்லை.  மின்சார சபையின் செலவினங்களைக் கையாண்டு தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதாக இருந்தால் கட்டாயமாகக் கட்டண சீரமைப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டியேற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »