Our Feeds


Tuesday, February 11, 2025

SHAHNI RAMEES

#UPDATE: துப்பாக்கியுடன் மாயமான பொலிஸ் கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது!

 

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த சனிக்கிழமை (08) தனது துப்பாக்கியுடன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் பெற்றோர், திங்கட்கிழமை (10) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »